21 6172cadf35a84 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

Share

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பான காணொலியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த காணொலியை பதிவிட்டுள்ள அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தற்போது இந்த சம்பவம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் காதுகளுக்கு சென்றடையும் என பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, மோட்டார்சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞர்களை போக்குவரத்துப் பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது, மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...