thavamani ajmeer 1
செய்திகள்உலகம்

கணவனைக் கொன்ற இளம் பெண்-அதிர்ச்சி சம்பவம்!!

Share

கணவனைக் கொன்று விட்டு மாரடைப்பால் கணவன் உயிரிழந்து விட்டார் என நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்த அப்பள வியாபாரியான சந்திரசேகர் (வயது-43), தவமணி (வயது-35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.

சமீப காலமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 28 ஆம் திகதி அன்று நள்ளிரவு நீண்ட நேரம் குடும்பத் தகராறு நடந்ததை அடுத்து மனைவி கணவரை கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அமத்தியும் கொலைசெய்துள்ளார்.

காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என அயலவர்களுக்கு தெரிவித்தார்.

தகவலறிந்த வில்லியனூர் பொலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தபோது, பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவர் கணவனைக் கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

அரசூரில் கறிக்கோழி கடைக்கு அடிக்கடி செல்லும்போது திண்டுக்கல்லை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது-25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது கள்ள உறவாக மாறியது. எங்கள் வீட்டில் மாடியிலேயே வாடகைக்கு குடியேறினார் அஜ்மீர். எங்கள் இருவருக்கும் இருக்கும் தொடர்பு தெரிந்துவிட்டதால் கணவர் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 28 ஆம் திகதி தகராறு அதிகமானது.

இதையடுத்து நானும் அவனும் சேர்ந்து சந்திரசேகரை கழுத்தை நெரித்தும் தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும் கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டார் என எல்லோரிடமும் சொன்னோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...