thavamani ajmeer 1
செய்திகள்உலகம்

கணவனைக் கொன்ற இளம் பெண்-அதிர்ச்சி சம்பவம்!!

Share

கணவனைக் கொன்று விட்டு மாரடைப்பால் கணவன் உயிரிழந்து விட்டார் என நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்த அப்பள வியாபாரியான சந்திரசேகர் (வயது-43), தவமணி (வயது-35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.

சமீப காலமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 28 ஆம் திகதி அன்று நள்ளிரவு நீண்ட நேரம் குடும்பத் தகராறு நடந்ததை அடுத்து மனைவி கணவரை கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அமத்தியும் கொலைசெய்துள்ளார்.

காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என அயலவர்களுக்கு தெரிவித்தார்.

தகவலறிந்த வில்லியனூர் பொலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தபோது, பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவர் கணவனைக் கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

அரசூரில் கறிக்கோழி கடைக்கு அடிக்கடி செல்லும்போது திண்டுக்கல்லை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது-25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது கள்ள உறவாக மாறியது. எங்கள் வீட்டில் மாடியிலேயே வாடகைக்கு குடியேறினார் அஜ்மீர். எங்கள் இருவருக்கும் இருக்கும் தொடர்பு தெரிந்துவிட்டதால் கணவர் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 28 ஆம் திகதி தகராறு அதிகமானது.

இதையடுத்து நானும் அவனும் சேர்ந்து சந்திரசேகரை கழுத்தை நெரித்தும் தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும் கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டார் என எல்லோரிடமும் சொன்னோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...