nido
செய்திகள்இலங்கை

மீசாலை விபத்தில் இளைஞன் பலி!

Share

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீசாலை, மடத்தடி பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வண்டியில் பயணித்த குறித்த இளைஞன் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய நிலையில், மீண்டும் காருடன் மோதியுள்ளார்.

விபத்தில், சாவகச்சேரி சங்கத்தனையைச் சேர்ந்த வரதன் நிடோஜன் (வயது-24) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...