21 614463488648d
செய்திகள்இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்! – நீதி வேண்டி யாழில் போராட்டம்

Share

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணத்துக்கு நீதி வேண்டி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (16) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது–24) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்தநபர் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த நபரின் உறவினர்கள் இறுதிக் கிரியை ஒன்றில் அவர் கலந்துகொண்டார் எனவும், அங்கு அவருடன் சிலர் முரண்பட்டனர் எனவும், அவர்களே அவரை கொலை செய்தனர் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.

எனவே குறித்த மரணம் கொலை எனவும், கொலை தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

21 61446348aa1e6 21 61446348c6311 21 614463484c957 21 614463485f316 21 6144634831b4c

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...