un
உலகம்செய்திகள்

800 கோடியை எட்டும் உலக சனத்தொகை!

Share

மனித அபிவிருத்தியில் இதுவொரு மைல் கல் என்று குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள், எதிர்வரும் 15ஆம் திகதியன்று உலக சனத்தொகை 800 கோடியை அடையும் என்று கணக்கிட்டுள்ளது.

உலக சனத்தொகை, 700 கோடியில் இருந்து 800 கோடியாக உயர்வதற்கு 12 வருடங்கள் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஐ.நா, 900 கோடியாக உயர்வதற்கு இன்னும் 15 வருடங்கள் எடுக்கும் என்றும் கணித்துள்ளது.

பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, தனிநபர் சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மனித ஆயுட்காலம் படிப்படியாக அதிகரிப்பது மற்றும் சில நாடுகளில் அதிக மற்றும் நிலையான கருவுறுதல் நிலைகளின் விளைவாகவே சனத்தொகை அதிகரிப்பதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

நமது மனித குடும்பம் பெரிதாக வளரும்போது, ​​​​அது மேலும் பிளவுபடுகிறது என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்கின்றனர் என்றும் கடன், கஷ்டங்கள், போர்கள் மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து நிவாரணத்துக்காக வீடுகளை விட்டு வெளியேறும் பதிவு எண்ணிக்கையை அவர் மேற்கோள் காட்டினார்.

ஒரு சில கோடீஸ்வரர்கள் உலகின் ஏழ்மையான பாதிப் பகுதியினரின் செல்வத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள் எனவும் முதல் ஒரு சதவீதம் பேர் உலக வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...