tamilni 326 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட கொடூர தாய்! விரைவில் நாடுகடத்தல்

Share

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட கொடூர தாய்! விரைவில் நாடுகடத்தல்

பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் Colorado நகரில் கிம்பெர்லீ சிங்லர் (35) என்ற பெண் தனது 9 மற்றும் 7 வயது குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதிர்ஷ்டவசமாக மற்றொரு 11 வயது மகள் அவரிடம் இருந்து உயிர்தப்பினார்.

முதலில் குழந்தைகளுக்கு தூக்க மருந்தை போதைப்பொருளாக கொடுத்த கிம்பெர்லீ, அதன் பின்னர் அவர்களின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொலை செய்து 11 நாட்கள் கழித்து பிரித்தானியாவுக்கு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து லண்டன் ஹொட்டலில் தங்கியிருந்த கிம்பெர்லீ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவரது முன்னாள் கணவர் கெவின் வென்ட்ஸ், கொல்லப்பட்ட குழந்தைகளான Elianna ‘Ellie’ Wentz (9), Aden Wentz (7) ஆகியோரின் உடல்களை அடையாளம் காட்டினார்.

முன்னதாக, El Paso County Coronor’s Office கடந்த வாரம் வெளியிட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், குழந்தைகள் இருவரும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவித்தன.

மேலும், அவர்களின் ரத்தத்தில் Doxylamine எனும் சாத்தியமான நச்சு அளவுகள் காணப்பட்டது மற்றும் இது தூக்கத்திற்கு உதவி தரும் மற்றும் ஒவ்வாமை மருந்துகளில் பொதுவாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மூன்று குழந்தைகளின் தாயான கிம்பெர்லீ அமெரிக்காவுக்கு நாடு கடத்த காத்திருக்கிறார். ஆனால் இந்த செயல்முறை பல மாதங்கள் ஆகலாம் என உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கிம்பெர்லீ வரும் 26ஆம் திகதி லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இரண்டு கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி என 10 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...