செய்திகள்அரசியல்இலங்கைஉலகம்

உக்ரைன், ரஷ்யா போரால் ஜெனிவாவில் இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பா?

Share
un 1
Vote General Assembly Seventy-fourth session 28th plenary meeting Necessity of ending the economic, commercial and financial embargo imposed by the United States of America against Cuba – Item 39 – A/74/91/Rev.1, A/74/L.6
Share

“போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னரே ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் மூண்டது. அது தொடர்பிலேயே அனைவரினதும் கவனம் திரும்பியது. ஐ.நா. மற்றும் அதன் கிளை அமைப்புகளின் பார்வையும் திரும்பின. அவ்வாறு கவனம் செலுத்தப்பட வேண்டியது மேற்படி அமைப்புகளின் கடப்பாடும்கூட.

எனவே, இப்படியான நிலையில் இலங்கைத் தமிழர் விவகாரம், மனித உரிமைகள் பேரவையில் கவனிப்பாரற்று போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அந்த அச்சத்தை போக்கும் விதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் மிகவும் கடுமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கை குறித்து மார்ச் 03 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது உறுப்பு நாடுகளின் நிலைப்பாடுகளையும் அறியலாம்.

அதேவேளை, நாம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள். போரின் வலி நன்கு புரியும். எனவே, போரை நிறுத்துமாறு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார் எம்.ஏ. சுமந்திரன்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...