27 4
உலகம்செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் முழுமையாக நிறுத்தம்..!

Share

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, ஜம்மு மற்றும் பதன்கோட்டில் மேற்கொள்ளப்படும் என்று விடுக்கப்பட்ட விமானத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது,

இந்தநிலையில்; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றமையால், ஐபிஎல்லின் முழு போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களால் பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இது தொடர்பில் அறிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, திடீரென்று மின்சார விளக்குகள் அணைந்தன.

இதனையடுத்து, அணிகளின் வீரர்களும் பார்வையாளர்களும் பாதுகாப்பு கருதி மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த மைதானத்தின் கொள்ளளவு 23,000 பேர் என்ற நிலையில், வெளியேற்றப்பட்டபோது சுமார் 80 சதவீத இரசிகர்கள் அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...