15 26
உலகம்செய்திகள்

2,400 மைல்கள் தொலைவு.., உலகிலேயே மர்மங்கள் நிறைந்த தீவு எங்குள்ளது தெரியுமா?

Share

2,400 மைல்கள் தொலைவு.., உலகிலேயே மர்மங்கள் நிறைந்த தீவு எங்குள்ளது தெரியுமா?

பல மர்மமான நிகழ்வுகளுடன் கூடிய தீவு ஒன்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகில் பல நூற்றாண்டுகளாக மர்மங்கள் நிறைந்து பல இடங்கள் உள்ளன. அந்தவகையில், தற்போது நாம் பனிக்கட்டி மற்றும் கடலால் சூழப்பட்ட தீவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் பார்க்க போகும் தீவு பௌவெட் தீவு (Bouvet Island) ஆகும். இந்த இடம் மக்களிடமிருந்து 2,400 மைல்கள் தொலைவில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான இடமாக அறியப்படுகிறது.

இந்த தீவானது தென் அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில், தென்னாப்பிரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் உள்ளது. இது பனிக்கட்டி மற்றும் கடலால் சூழப்பட்டுள்ளது.

இந்த தீவானது பல மர்மங்களுடன் இணைந்துள்ளது. இந்த தீவில் 1964 -ம் ஆண்டில் மனிதர்கள் யாரும் இல்லாத ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த மர்மங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே உள்ளது.

இதையடுத்து 1979 -ம் ஆண்டில் அமெரிக்க செயற்கைக்கோள் Bouvet தீவு மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு அருகே ஒரு ஒளியைக் கண்டுபிடித்தது.

இந்த ஒளியானது தென்னாப்பிரிக்கா-இஸ்ரேலிய அணு ஆயுத சோதனையின் விளைவாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை.

மேலும், இந்த தீவானது பல கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக விளங்குகிறது.

இங்கு, பெங்குவின், ஓர்காஸ் மற்றும் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதேபோல, பனிப்பாறை பனி பெட்ரல் மற்றும் அண்டார்டிக் பிரியான் ஆகிய பறவைகளும் காணப்படுகிறது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...