24 6601ba6199721
உலகம்செய்திகள்

புடின், ரஷ்யர்களை படுகொலை செய்வோம்! ISIS எச்சரிக்கை

Share

புடின், ரஷ்யர்களை படுகொலை செய்வோம்! ISIS எச்சரிக்கை

மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் கைதானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது, தங்கள் சகோதாரர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது என ISIS எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்கள் கடுமையான காயங்களுடன் ரஷ்ய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் அவர்கள் ரஷ்ய ராணுவ வீரர்களால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ISIS எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பு, ”இஸ்லாமிய கைதிகளை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். அவர்கள் கொடுமைப்படுத்தப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள், அவர்களின் ஆயிரக்கணக்கான சகோதரர்களுக்கு இரத்த வெறியை அதிகப்படுத்துகிறது.

அனைத்து காட்டுமிராண்டி ரஷ்யர்களுக்கும்! இஸ்லாமிய கைதிகளை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். ஜாக்கிரத்தை! பிடிபட்ட எங்கள் சகோதரர்களுக்காக உங்களைப் பழிவாங்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று எண்ண வேண்டாம்” என அச்சுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...