sad
உலகம்செய்திகள்

கேள்வி கேட்ட பத்திரிகையாளரை டாஸ் வார்த்தையால் திட்டிய அமெரிக்க அதிபர்!!

Share

ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுத்த போது அவருக்கு இருந்த ஆதரவு தற்போது தொடர்ந்து குறைந்து வருகின்றது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் ஜோ பைடன் செல்வாக்கு 54 வீதமாக காணப்பட்டது. எனினும் தற்சமயம் அவரது செயல்பாடுகளில் அதிருப்தி கண்ட மக்களால் 41% ஆக அவரது செல்வாக்கு குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மசோதாக்களை நிறைவேற்றுவது, அதிகரித்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளில் ஜோ பைடனின் ஆட்சி தடுமாறுவது தான் இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அப்போது ஒலிவாங்கி ஓனில் இருந்தபோதே ஜோ பைடன் அவரை கெட்ட வார்த்தையில் திட்டினார் . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பைடன் தரப்பு, பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை வைத்துப் கேள்வி எழுப்பினார். அந்த தகவலை விமர்சிக்கும் வகையில் தான் அவ்வாறு பேசினார்.

எனினும் பத்திரிகையாளர் சந்திப்பு நிறைவு செய்த அதிபர் பத்திரிகையாளரை அவர் தனிப்பட்ட முறையில் திட்டவில்லை . பத்திரிகையாளரை தொடர்பு கொண்டு பேசி விட்டார் என தெரிவித்துள்ளது வெள்ளை மாளிகை.



#WorldNews


Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
iran us
உலகம்

அமெரிக்காவின் 80 இற்கும் அதிகமான இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் – எண்ணெய் ஏற்றுமதி உரிமத்தினை ரத்து செய்த அமெரிக்கா!

அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக்...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...