4 10 scaled
உலகம்செய்திகள்

கையில் பேனா வைத்து இருந்த நபரை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பொலிஸார்

Share

கையில் பேனா வைத்து இருந்த நபரை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பொலிஸார்

அமெரிக்காவில் கத்தியை கொண்டு தாக்க வருவதாக நினைத்து மார்க்கர் பேனாவை கையில் வைத்து இருந்த நபரை பொலிஸார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற துயர சம்பவம் ஒன்றின், கிராஃபிக் உடல் கேமரா காட்சிகளை டென்வர் காவல்துறை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில், பிராண்டன் கோல் (Brandon Cole) என்ற 36 வயதுடைய நபர் கத்தியை கொண்டு தாக்க வருவதாக நினைத்து தற்காப்பிற்காக அவரை பொலிஸார் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது பதிவாகியுள்ளது.

ஆனால் பிராண்டன் கோல் தன்னுடைய கையில் மார்க்கர் பேனா தான் வைத்து இருந்தார் என்பதை பின்னர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் டென்வர் காவல்துறை இந்த துப்பாக்கி சூட்டை மிகப்பெரிய சோகம் என்று குறிப்பிட்டுள்ளது, அத்துடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

CBS செய்திகள் படி, குடும்ப வன்முறை தொடர்பாக அண்டை வீட்டார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அப்போது பிராண்டன் கோலை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பொலிஸாரை பார்த்து வீல் நாற்காலியில் அமர்ந்து இருந்த கோலின் மனைவி, “தயவு செய்து தனது கணவனை துப்பாக்கியால் சுட்டு விடாதீர்கள் என்று கெஞ்சினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக பொலிஸார் அவரது கணவர் பிராண்டன் கோலை தற்காப்பு நோக்கில் சுட்டனர் என தெரியவந்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...