5 8 scaled
உலகம்செய்திகள்

டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்ற 150 உக்ரைனிய வீரர்கள்

Share

டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்ற 150 உக்ரைனிய வீரர்கள்

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் நுழைய முயன்று டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்ற 150 உக்ரைனிய ராணுவ வீரர்களை வெளியேற்றி இருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு டான்பாஸ் உட்பட 4 நகரங்களை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அதை ரஷ்யாவின் ஒற்றை பகுதியாகவும் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா அறிவித்தது.

இருப்பினும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை எப்படியாவது மீண்டும் கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைய முயன்று டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்ற 150 உக்ரைனிய ராணுவ வீரர்களை வெற்றிகரமாக வெளியேற்றி இருப்பதாக சனிக்கிழமை ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த 150 உக்ரைனிய ராணுவ வீரர்களும்  கொல்லப்பட்டனரா அல்லது சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனரா என்று தெளிவாக தெரியவில்லை.

இது தொடர்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட அரசாங்கம் தெரிவித்த தகவலில், ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான கிழக்கு கெர்சன் பகுதியில் உக்ரைனின் நாசவேலை கும்பல் டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்றது.

ஆனால் அதை ரஷ்ய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து விட்டது என தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...