4 10 scaled
உலகம்செய்திகள்

கையில் பேனா வைத்து இருந்த நபரை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பொலிஸார்

Share

கையில் பேனா வைத்து இருந்த நபரை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பொலிஸார்

அமெரிக்காவில் கத்தியை கொண்டு தாக்க வருவதாக நினைத்து மார்க்கர் பேனாவை கையில் வைத்து இருந்த நபரை பொலிஸார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற துயர சம்பவம் ஒன்றின், கிராஃபிக் உடல் கேமரா காட்சிகளை டென்வர் காவல்துறை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில், பிராண்டன் கோல் (Brandon Cole) என்ற 36 வயதுடைய நபர் கத்தியை கொண்டு தாக்க வருவதாக நினைத்து தற்காப்பிற்காக அவரை பொலிஸார் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது பதிவாகியுள்ளது.

ஆனால் பிராண்டன் கோல் தன்னுடைய கையில் மார்க்கர் பேனா தான் வைத்து இருந்தார் என்பதை பின்னர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் டென்வர் காவல்துறை இந்த துப்பாக்கி சூட்டை மிகப்பெரிய சோகம் என்று குறிப்பிட்டுள்ளது, அத்துடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

CBS செய்திகள் படி, குடும்ப வன்முறை தொடர்பாக அண்டை வீட்டார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அப்போது பிராண்டன் கோலை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பொலிஸாரை பார்த்து வீல் நாற்காலியில் அமர்ந்து இருந்த கோலின் மனைவி, “தயவு செய்து தனது கணவனை துப்பாக்கியால் சுட்டு விடாதீர்கள் என்று கெஞ்சினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக பொலிஸார் அவரது கணவர் பிராண்டன் கோலை தற்காப்பு நோக்கில் சுட்டனர் என தெரியவந்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...