11
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சிலருக்கு டீப்சீக்கை பயன்படுத்த தடை

Share

அமெரிக்காவில் சிலருக்கு டீப்சீக்கை பயன்படுத்த தடை

அமெரிக்க(USA) நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டீப்சீக் ஏ.ஐ. மாதிரியை பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா கடந்த சில தினங்களுக்கு முன் டீப்சீக்(Deepseek) எனும் ஏ.ஐ. மாதிரியை வெளியிட்டது.

இது அமெரிக்காவின் சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏ.ஐ மாதிரிகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

டீப்சீக் மாதிரி இலவசமாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலானோர் தங்களது பதிவிறக்கம் செய்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கணினி மற்றும் தொலைபேசிகளில் பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என நாடாளுமன்ற தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

AI தொழில்நுட்பத்தின் விரைவான பரிணாமம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் நிர்வாக சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

டீப்சீக் தற்போது மதிப்பாய்வின் கீழ் உள்ளதால் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை.

சாட்பாட்டை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் மென்பொருளை வழங்கவும், சாதனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அச்சுறுத்தும் நபர்களை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தாலி நாடு முழுவதும் டீப்சிக் ஏ.ஐ. மாதிரிக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...