உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சிலருக்கு டீப்சீக்கை பயன்படுத்த தடை

Share
11
Share

அமெரிக்காவில் சிலருக்கு டீப்சீக்கை பயன்படுத்த தடை

அமெரிக்க(USA) நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டீப்சீக் ஏ.ஐ. மாதிரியை பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா கடந்த சில தினங்களுக்கு முன் டீப்சீக்(Deepseek) எனும் ஏ.ஐ. மாதிரியை வெளியிட்டது.

இது அமெரிக்காவின் சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏ.ஐ மாதிரிகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

டீப்சீக் மாதிரி இலவசமாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலானோர் தங்களது பதிவிறக்கம் செய்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கணினி மற்றும் தொலைபேசிகளில் பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என நாடாளுமன்ற தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

AI தொழில்நுட்பத்தின் விரைவான பரிணாமம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் நிர்வாக சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

டீப்சீக் தற்போது மதிப்பாய்வின் கீழ் உள்ளதால் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை.

சாட்பாட்டை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் மென்பொருளை வழங்கவும், சாதனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அச்சுறுத்தும் நபர்களை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தாலி நாடு முழுவதும் டீப்சிக் ஏ.ஐ. மாதிரிக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...