10
இலங்கைசெய்திகள்

சுகாதார அமைப்புக்கு சுமையாக மாறியுள்ள நோய்கள்!

Share

சுகாதார அமைப்புக்கு சுமையாக மாறியுள்ள நோய்கள்!

நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி நோய்களுக்கான சிகிச்சை சேவைகளைப் போன்று நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற, இலங்கை போஷாக்கு சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விஞ்ஞான ஆய்வு அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,”நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான அடிப்படை விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவது மிகவும் அவசியம்.

நோய்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். இலங்கை ஊட்டச்சத்து சங்கம் இதில் முன்னணியில் உள்ளது.

ஊட்டச்சத்தை உயர்த்தி, சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தி, அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இது தனிநபர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இந்த நாட்டில் சுகாதார அமைப்பின் தேவையற்ற செலவைக் குறைக்கவும் உதவும்.

இந்த இலக்கை அடைவதற்கு, மருத்துவ வல்லுநர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகப் பிரிவுகளின் பங்களிப்பு செய்ய வேண்டும்.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 76
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து: எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, இலங்கை...

world 70
செய்திகள்இந்தியா

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம்: அமைச்சர் சமந்தா வித்யரத்ன

இலங்கையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிகமாக 5,000 ரூபாய் உர மானியம் வழங்க...

world 74
செய்திகள்உலகம்

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ: உலகளவில் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வுகளால் இந்த ஆண்டு ஆப்பிரிக்கா,...