tamilni 538 scaled
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

Share

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

ரஷ்யாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் நேற்று சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உக்ரைன் படைகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவ விடுமுறையின்போது அந்த நாட்டின் ஏ-50 என்ற விமானத்தை வீழ்த்துவதற்கு உதவிய உக்ரைனின் இராணுவ உளவுத்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக இராணுவ தளபதி மைகோலா ஓலேஷ்சுக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வான்வழித் தாக்குதல் நடப்பதாகவும், தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டதாகவும், இதில், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் கூறி வரும் நிலையில், ரஷ்ய இராணுவம் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும், ரஷ்ய படை நடத்திய தாக்குதலில், எதிர்பாராதவிதமாக இந்த விமானம் மீது குண்டு விழுந்து விபத்து ஏற்பட்டதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....