tamilni 538 scaled
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

Share

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

ரஷ்யாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் நேற்று சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உக்ரைன் படைகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவ விடுமுறையின்போது அந்த நாட்டின் ஏ-50 என்ற விமானத்தை வீழ்த்துவதற்கு உதவிய உக்ரைனின் இராணுவ உளவுத்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக இராணுவ தளபதி மைகோலா ஓலேஷ்சுக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வான்வழித் தாக்குதல் நடப்பதாகவும், தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டதாகவும், இதில், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் கூறி வரும் நிலையில், ரஷ்ய இராணுவம் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும், ரஷ்ய படை நடத்திய தாக்குதலில், எதிர்பாராதவிதமாக இந்த விமானம் மீது குண்டு விழுந்து விபத்து ஏற்பட்டதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...