tamilni 539 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் தீர்மானம்

Share

பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் தீர்மானம்

வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொதுத்தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ நடைபெற்றால் இரண்டுக்கும் கட்சி தயாராகவே உள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், இன்று இந்த நாட்டில் பலம் வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுன திகழ்வதாகவும், பசில் ராஜபக்சவின் திட்டங்களுடனேயே கட்சியின் வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சவின் செயற்பாடு மற்றும் கட்சிக்கு இணையான ஒரு அரசியல் கட்சி தலைவர் இருப்பார் என தாம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...