24 66865256b79a9
உலகம்செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நேரம்

Share

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நேரம்

பிரித்தானிய(uk) நாடாளுமன்றத் தேர்தல் இன்று (4) நடைபெறுகின்ற நிலையில் வாக்களிக்கும் நடவடிக்கைகள் உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நேரம், இரவு 10.00 மணியுடன் முடிவு பெறும்.

இதன் பின்னர், தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களிடம், யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளின் முடிவும் வெளியாகும்.

இந்த கருத்துக்கணிப்புகள் பொதுவாகவே, சரியாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. 2019இல், போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என மக்கள் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்திருந்தன.

இரவு 10.00 மணி வாக்களிப்பு முடியும் அதேவேளை, 11.00 மணியளவில், வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களை சென்றடையும். இரவு 11.30 முதல் 12.15 மணி வரை யார் முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பது என்னும் போட்டி ஆரம்பமாகும்.

கடந்தமுறை, Newcastle upon Tyne Central தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முதலில், (11.27 )மணிக்கு வெளியாகின.

2017இலும் இந்த தொகுதியில்தான் முதன்முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின. அதிகாலை 12.30 முதல் 3.00 மணி வரை சுமார் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும்.

3.00 மணிக்கு மேல், எந்தக் கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றியது, எத்தனை இடங்களை இழந்தது என்ற விவரங்களும் வெளியாகும்.

இதேவேளை, தொழிற் கட்சி(Labour Party) பெரும்பாலான இருக்கைகளைக் கைப்பற்றும் என்றும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு(Conservative Party) பெரிய இழப்பு ஏற்படும் என்றும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...