27 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

Share

பிரித்தானியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க பிரித்தானியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் சமீப நாட்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்தே, பல எண்ணிக்கையிலான நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அது கலவரமாக வெடித்துள்ளது. இதுவரை சுமார் 400 பேர்கள் கைதாகியுள்ளனர்.

மேலும் கைது நடவடிக்கை தொடரும் என்றே அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிறது. மட்டுமின்றி, புதன்கிழமை 39 பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று வலதுசாரிகள் அமைப்பு ஒன்று தங்கலின் ஆதரவாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலவரம் அல்லது ஆர்ப்பாட்டம் நடக்கும் பகுதிகளை ஐக்கிய அமீரக மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், மக்கள் கூடும் பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என கோரியுள்ளது.

மேலும், லண்டனில் உள்ள ஐக்கிய அமீரக தூதரகம் வெளியிடும் எச்சரிக்கைகளை பின்பற்றவும், ஐக்கிய அமீரக தூதரகங்கள் வெளியிடும் அறிக்கைகளை கவனத்தில் கொள்ளவும் வெளிவிவகார அமைச்சரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சில நூறு மக்கள் திரண்டு பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிசார் மீது கற்களை வீசுவதும், கடைகளை சூறையாடுவதும் மசூதிகள் மற்றும் ஆசிய நாட்டவர்களின் வணிக ஸ்தாபனங்களை சேதப்படுத்துவதுமாக வன்முறை நீடித்து வருகிறது.

வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்துடன், உறுதி செய்யப்படாத சில சமூக ஊடக காணொளிகளில் சிறுபான்மை இன மக்கள் தாக்கப்படுவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Share
தொடர்புடையது
Padme
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குழுத் தலைவர் பத்மேவின் கறுப்புப் பணம் நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்படுகிறதா? – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே-வுடன் தொடர்புடைய தென்னிலங்கை நடிகைகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப்...

articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...