27 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

Share

பிரித்தானியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க பிரித்தானியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் சமீப நாட்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்தே, பல எண்ணிக்கையிலான நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அது கலவரமாக வெடித்துள்ளது. இதுவரை சுமார் 400 பேர்கள் கைதாகியுள்ளனர்.

மேலும் கைது நடவடிக்கை தொடரும் என்றே அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிறது. மட்டுமின்றி, புதன்கிழமை 39 பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று வலதுசாரிகள் அமைப்பு ஒன்று தங்கலின் ஆதரவாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலவரம் அல்லது ஆர்ப்பாட்டம் நடக்கும் பகுதிகளை ஐக்கிய அமீரக மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், மக்கள் கூடும் பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என கோரியுள்ளது.

மேலும், லண்டனில் உள்ள ஐக்கிய அமீரக தூதரகம் வெளியிடும் எச்சரிக்கைகளை பின்பற்றவும், ஐக்கிய அமீரக தூதரகங்கள் வெளியிடும் அறிக்கைகளை கவனத்தில் கொள்ளவும் வெளிவிவகார அமைச்சரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சில நூறு மக்கள் திரண்டு பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிசார் மீது கற்களை வீசுவதும், கடைகளை சூறையாடுவதும் மசூதிகள் மற்றும் ஆசிய நாட்டவர்களின் வணிக ஸ்தாபனங்களை சேதப்படுத்துவதுமாக வன்முறை நீடித்து வருகிறது.

வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்துடன், உறுதி செய்யப்படாத சில சமூக ஊடக காணொளிகளில் சிறுபான்மை இன மக்கள் தாக்கப்படுவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...