Padme
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குழுத் தலைவர் பத்மேவின் கறுப்புப் பணம் நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்படுகிறதா? – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

Share

பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே-வுடன் தொடர்புடைய தென்னிலங்கை நடிகைகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

துபாயில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பத்மேவைச் சந்தித்த தென்னிலங்கை நடிகை ஒருவர், அவரைத் திரைப்படத் தயாரிப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் கையடக்கத் தொலைபேசியில், துபாயில் தென்னிலங்கையின் நடிகைகள் சிலருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

:இந்தப் புகைப்படங்களில் உள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த நடிகைகள் தொடர்பில் CID விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கெஹல்பத்தர பத்மேவின் கறுப்புப் பணம் (Black Money) குறித்த நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா (Money Laundering) என்பது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல தென்னிலங்கை நடிகைகள் இது தொடர்பில் தமது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். தற்போது தடுப்புக் காவலில் உள்ள பத்மேவிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...