1264996 cockpit
உலகம்செய்திகள்

இரண்டு இந்திய விமானிகள் மரணம்: சோகத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்

Share

கடந்த இரண்டு நாட்களில், இந்திய விமானிகள் இருவர் உயிரிழந்த விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

நேற்று முன்தினம், வியாழக்கிழமை, நாக்பூரிலிருந்து புனே நோக்கிச் செல்லும் விமானத்தின் விமானியாகிய கேப்டன் மனோஜ் சுப்ரமணியம் (40), விமானத்தில் ஏறச்செலும்போது நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையன்று, டெல்லியிலிருந்து தோஹா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றில் கூடுதல் விமானப் பணியாளராக பயணித்துக்கொண்டிருந்த மற்றொரு விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரும் உயிரிழந்துவிட்டார். இரண்டு நாட்களில், இந்திய விமானிகள் இருவர் உயிரிழந்த விடயம் சோகத்தை உருவாக்கியுள்ள நிலையில், இந்த தகவல்களை விமான போக்குவரத்துத்துறை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, மியாமியிலிருந்து சிலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியான Ivan Andaur (56) என்பவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கழிவறையிலேயே அவர் நிலைகுலைந்து விழுந்து இறந்துவிட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...