5 1 scaled
உலகம்செய்திகள்

கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை

Share

கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை

வங்கியில் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் விரக்தியில் மனைவிக்கு போன் செய்து விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம், தமிழகத்தில் உள்ள சென்னை காசிமேடு விநாயகபுரம் 1-வது பகுதியைச் சேர்ந்த ரகுமான்(38) என்பவரும், சாமுண்டீஸ்வரி என்பவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர், எவர்சில்வர் பட்டறையில் பாலிஸ் போடும் வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனை மாத தவணையாக 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தார். இந்நிலையில், சரியாக வேலை இல்லாத காரணத்தினால் சில மாதங்களாக பணத்தை செலுத்த முடியவில்லை.

அதனால், வங்கி ஊழியர்கள் ரகுமானின் வீட்டிற்கு வந்து பணத்தை தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, ரகுமான் தனது மனைவிக்கு போன் செய்து, வங்கி ஊழியர்கள் பணத்தை தருமாறு மிரட்டி வருகின்றனர். குழந்தைகளையும், குடும்பத்தையும் பார்த்து கொள். நான் தூக்கிட்டு தற்கொலை செய்ய போகிறேன் எனக் கூறி போனை கட் செய்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி பக்கத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து பார்க்கும் படி கூறியுள்ளார். அவர்கள், அங்கு சென்று பார்த்த போது, ரகுமான் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனிடையே, ரகுமான் உறவினர்கள், வங்கி கடனை திருப்பி செலுத்துமாறு மிரட்டல் கொடுத்த ஊழியர்களிடம் பணம் ரெடியாக இருக்கிறது, வாங்கிக் கொள் என கூறியுள்ளனர்.

அதை வாங்க ஊழியர்கள் வந்த போது, அவர்களை பிடித்து காசிமேடு பொலிசில் ஒப்படைத்தனர். இது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...