6 1 scaled
உலகம்செய்திகள்

பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய நாடு: திண்டாடும் மக்கள்

Share

பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய நாடு: திண்டாடும் மக்கள்

கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு இந்தமுறை கடும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இத்தாலி, கிரேக்கம் உட்பட பல நாடுகளில் பற்றியெரியும் காட்டுத்தீயால், அங்குள்ள அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேக்கத்தில் ரோட்ஸ் மற்றும் கோர்ஃபு தீவுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், அவசர தேவைகளுக்காக மட்டும் குறிப்பிட்ட நிறுவனங்கள் விமான சேவையை முன்னெடுத்தன.

இந்த நிலையில் மஜோர்காவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அதே நேரத்தில் ஐபிசா மற்றும் மெனோர்காவும் அதிக ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி, கிரேக்க நாடுகளின் வரிசையில் தற்போது போர்த்துகல் நாடும் காட்டுத்தீ ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் லிஸ்பனுக்கு மேற்கே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள விடுமுறை தலமான காஸ்காய்ஸ் அருகே தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்கவும், வீடுகளை பாதுகாக்கவும் குடியிருப்பாளர்களும் தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விமானங்களும் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...