4 4 scaled
உலகம்செய்திகள்

இலங்கை பேருந்தில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது: சுற்றுலா பயணி குற்றச்சாட்டு

Share

இலங்கை பேருந்தில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது: சுற்றுலா பயணி குற்றச்சாட்டு

இலங்கை பொது போக்குவரத்தில் பயணிப்பது ஆபத்தானது என்று ரஷ்ய சுற்றுலா பயணி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ரஷ்ய பயணி ஒருவர் சுற்றுலா செல்வதற்காக கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு வருவதற்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பொலன்னறுவை சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியது
இது குறித்து ரஷ்ய பயணி கூறுகையில், “பொலன்னறுவைக்கு சென்ற பேருந்து 95Kmph வேகத்தில் சென்றது. சில சாலைகளில் 100Kmph வேகத்தில் சென்றது. நான் எனது கூகுள் மேப் (Google Map) செயலியின் மூலம் பேருந்தின் வேகத்தை பதிவு செய்தேன்.

இதனால், பேருந்து ஓட்டுநரிடம் மெதுவாக ஓட்டுமாறு கூறினேன். ஆனால், அவர் இதுபற்றி கேட்கவில்லை. பேருந்து பறப்பது போன்று இருந்தது. பக்கவாட்டில் பேருந்தை வளைத்து அலட்சியமாய் பிற வாகனங்களை முந்திச் சென்றது. இது எங்களது உயிருக்கு ஆபத்தானது.

நான் இலங்கையை சுற்றி பார்க்க வந்தேன். எங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லக்கூடிய சாதாரண சாரதி தேவை. பைத்தியக்கார சாரதி வேண்டாம்.

ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்து பேருந்தில் பயணம் செய்வது இலங்கை மக்களுக்கு தெரியும். இலங்கையில் பேருந்தில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது” என்று பேசினார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...