MNM3fG0GZsTxAfzyfoXG 1
இலங்கைஉலகம்செய்திகள்

போலி இத்தாலிய விசா மூலம் ஆட்கடத்தல்!

Share

போலி இத்தாலிய விசா மூலம் ஆட்கடத்தல்!

போலி இத்தாலிய விசா மூலம் ஆட்கடத்தலில் ஈடுபட முயன்ற இருவர் கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவம் நேற்றுமுன் தினம் (09) இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரிகள் போலி விசா மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற இருவரை விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கடத்தல் குறித்த தகவல்களை வெளியாகியுள்ளன.

இந்த கடத்தல்காரர்கள் இத்தாலி விசாவிற்காக 25 இலட்சத்து 17 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...