panda 1608643069
உலகம்செய்திகள்

உலகின் வயதான ஆண் பாண்டா கரடி உயிரிழப்பு!

Share

கூண்டில் வளர்க்கப்படும் உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி ஹொங்கொங்கில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தது.

ஆன் ஆன் என்று அழைக்கப்படும் 35 வயதான அந்தப் பாண்டாவுக்கு கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. அதன் வயதானது மனித வாழ்நாளுடன் ஒப்பிடுகையில் 105 வயதுக்கு நிகராகும்.

கடந்த சில வாரங்களாக உடல்நிலை மோசமடைந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஓசியன் பூங்கா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளது. ஆன் ஆன் அதன் ஜோடியான ஜியா ஜியாவுடன் சீன மத்திய அரசால் 1999 இல் ஹொங்கொங்கிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அதன் ஜோடியான ஜியா ஜியா 2016 ஆம் ஆண்டு தனது 38 வயதில் இறந்தது. இது மனிதப் பராமரிப்பில் அதிக காலம் உயிர் வாழ்ந்த பெண் பண்டா கரடியாக பதிவாகியுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...