panda 1608643069
உலகம்செய்திகள்

உலகின் வயதான ஆண் பாண்டா கரடி உயிரிழப்பு!

Share

கூண்டில் வளர்க்கப்படும் உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி ஹொங்கொங்கில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தது.

ஆன் ஆன் என்று அழைக்கப்படும் 35 வயதான அந்தப் பாண்டாவுக்கு கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. அதன் வயதானது மனித வாழ்நாளுடன் ஒப்பிடுகையில் 105 வயதுக்கு நிகராகும்.

கடந்த சில வாரங்களாக உடல்நிலை மோசமடைந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஓசியன் பூங்கா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளது. ஆன் ஆன் அதன் ஜோடியான ஜியா ஜியாவுடன் சீன மத்திய அரசால் 1999 இல் ஹொங்கொங்கிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அதன் ஜோடியான ஜியா ஜியா 2016 ஆம் ஆண்டு தனது 38 வயதில் இறந்தது. இது மனிதப் பராமரிப்பில் அதிக காலம் உயிர் வாழ்ந்த பெண் பண்டா கரடியாக பதிவாகியுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...