உலகம்செய்திகள்

மனிதவுருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் AI ரோபோ கலைஞர்

Share
4 34
Share

மனிதவுருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் AI ரோபோ கலைஞர்

Ai-Da என அழைக்கப்படும் உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் கலைஞர் ரோபோவானது பிரித்தானியாவில் உள்ள எய்டன் மெல்லர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓவியங்களை வரைவதற்காக பயன்படுத்தப்படும் குறித்த AI Model ரோபோவானது, கடந்த 2019ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ, தனது கண்களில் உள்ள கெமராக்களை பயன்படுத்தி ஓவியங்கள் வரைவதற்கு திறன் கொண்டுள்ளதுடன் AI அல்காரிதம்கள் மற்றும் ரோபோ கைகளை பயன்படுத்தி நேர்த்தியாக வரைகின்றது.

AI தொழில்நுட்பம் மூலம் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவானது, தனது கலை மற்றும் மனிதநேய பண்புகளினால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Ai-Daவினால் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் கண்காட்சிகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஏஐ ஃபோர் குட்’ என்னும் நிகழ்வில் Ai-Da ரோபோ, தொழில்நுட்பம் பற்றிய சிறந்த உரை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது.

இன்றைய சமுதாயத்தில் தொழில்நுட்பத்தின் மகத்தான ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கும் முகமாகவே இந்த ரோபோ கலைஞர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...