12 13
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிராக பிரித்தானியா எடுத்துள்ள நடவடிக்கை

Share

ஈரானுக்கு எதிராக பிரித்தானியா எடுத்துள்ள நடவடிக்கை

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் இராணுவத் தலைவர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.

கடந்த 01.10.2024 அன்று இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடாத்தியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமதாகவே பிரித்தானியா இந்தத் தடையை இன்று (14.10.2024) அறிவித்துள்ளது.

குறித்த தடைகள் ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள், வான்படை தலைவர்கள் மற்றும் பாலிஸ்டிக் மற்றும் கிரூஸ் ஏவுகணை வளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்புகள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானால் நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மேலும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், G7 நாடுகள் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளதோடு இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...