5
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது விரைந்து உதவிய இந்தியா

Share

இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது விரைந்து உதவிய இந்தியா

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளின் போது எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புத்தரின் போதனைகள் மற்றும் பாலியை செம்மொழியாக இந்திய அரசு அங்கீகரித்ததை நினைவுகூரும் வகையில், புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சர்வதேச அபிதம்ம திவாஸ் விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புத்தபெருமான் தனது சொற்பொழிவுகளை பாலி மொழியிலேயே ஆற்றியுள்ளார். இந்தநிலையில், இந்திய அரசு, பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை இந்த மாதத்தில் வழங்கியுள்ளதால், இந்த ஆண்டு அபிதம்மா திவாஸ் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாலி மொழிக்கு செம்மொழியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை, புத்தபெருமானின் மகத்தான பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த மரியாதை என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் புத்தபெருமானின் போதனைகள் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, புத்தபெருமானின் கொள்கையின் அடிப்படையில், துருக்கியில் நிலநடுக்கம், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுநோய் போன்ற உலகளாவிய அவசர நிலைகளின் போது இந்தியாவின் விரைவான நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...