பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்
உலகம்செய்திகள்

பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்

Share

பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்

அவுஸ்திரேலியாவில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், பயணிகளை நோக்கி திடீரென கேள்வி எழுப்பியதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிட்னியில் இருந்து கோலாலம்பூருக்கு MH122 Airbus-a330 எனும் விமானம் புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர் சக பயணிகளை நோக்கி ‘நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளா?’ எனக் கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

அவரது இந்த செயல் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து விமானக் குழுவினர் சந்தேகமடைந்து அவரது பையை ஆய்வு செய்தனர்.

ஆனால் அதில் ஆபத்தான எதுவும் இல்லை என தெரிந்தது. எனினும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாலை 4 மணிக்கு முன்னதாக விமானம் மீண்டும் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேலும் விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் ஒன்றின் முடிவில் விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. அவசரகால வாகனங்கள் விமானத்தை சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து பயணிகள் இறங்கினர்.

சில பயணிகள் ஜெட் விமானத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் முகமது என்று கூறிக்கொண்ட அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...