உலகம்செய்திகள்

குழந்தையைப் பெற்று விமானத்தின் கழிவறைக் குப்பைத் தொட்டிக்குள் விட்டுச்சென்ற தாய்!!!

Share
Baby
Share

விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் விட்டுச் செல்லப்பட்டிருந்த, பச்சிளம் குழந்தையை மொரிஷியசில் உள்ள ஒரு விமான நிலையத்தின் ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் குழந்தையைக் கழிவறையில் பிரசவித்துவிட்டு, அங்கேயே விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த 20 வயதாகும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

மொரிஷியஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான குறித்த விமானம் மடகாஸ்கர் நாட்டில் இருந்து ஜனவரி முதலாம் திகதி, சர் சிவசாகர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

விமானம் தரை இறங்கிய பின் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுங்க சோதனைகளின் போது, குழந்தை கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் இருப்பது ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குழந்தையைப் பெற்றெடுத்த தாய் என்று சந்தேகிக்கப்படும் பெண் அது தமது குழந்தை அல்ல என்று ஆரம்பத்தில் மறுத்து வந்ததாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் மிகச் சமீபத்தில் குழந்தையைப் பிரசவித்துள்ளார் என்ற விடயமும் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தை பராமரிக்கப்பட்டு வரும், அதே மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்தப் பெண் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

மொரிஷியசில் 02 ஆண்டுகள் பணிபுரிவதற்கான விசாவில் வந்துள்ள குறித்த மடகாஸ்கர் பெண் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய பின் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்.

அத்துடன் பெற்ற பிள்ளையை கைவிட்டுச் சென்ற விவகாரம் தொடர்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் மொரிஷியஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

24 2
உலகம்செய்திகள்

இந்தியாவில் போர் ஒத்திகை : மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், வரும் 7ஆம் திகதி இந்தியா முழுக்க போர்க்கால ஒத்திகை...