2 2 scaled
உலகம்செய்திகள்

கூகுள் Maps பின்பற்றி ஓட்டி ஆற்றில் கவிழ்ந்த கார்

Share

கூகுள் Maps பின்பற்றி ஓட்டி ஆற்றில் கவிழ்ந்த கார்

கேரளாவில் பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை கோதுருத் பகுதியில் உள்ள பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் இரண்டு இளம் மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் அத்வைத் (29), அஜ்மல் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்வைத் மற்றும் அஜ்மல் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுடன் பயணித்த மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கூகுள் மேப்பை பின்பற்றியபடி சாரதி அப்பகுதியை அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், கனமழை காரணமாக சாலை தெரியாததால், கூகுள் மேப் காட்டிய வழியையே பின்பற்றினர்.

எவ்வாறாயினும், கூகுள் மேப்ஸ் சுட்டிக்காட்டப்பட்டபடி கார் இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக தவறுதலாக முன்னோக்கிச் சென்று ஆற்றில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு படையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஒரு பெண் உட்பட மூன்று பயணிகள் மீட்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இறந்த இரு மருத்துவர்களின் உடல்களை மீட்க ஸ்கூபா டைவிங் குழுவை அதிகாரிகள் அனுப்பினர்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...