rtjy 331 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் இலங்கை தமிழருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

Share

கனடாவில் இலங்கை தமிழருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக இலங்கை தமிழர் கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் அமைச்சரவைக்கு கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டமை தொடர்பாக அவருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கரி ஆனந்தசங்கரியின் நியமனம் அவரது பொதுச் சேவைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும்.

உலகில் பலம் வாய்ந்த நாடு ஒன்றில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அவையில் முதன் முறையாக ஒரு ஈழத் தமிழருக்கு இடம் கிடைத்துள்ளது.

ஈழத் தமிழ் தேசம் கரிக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவரது அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவரை வாழ்த்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...