3 7
உலகம்செய்திகள்

உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்ற நாடுகள்

Share

உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்ற நாடுகள்

எதிர்வரும் 2026ம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவதற்கு 12 நாடுகள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளன.

அடுத்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரிலும் மொத்தமாக 20 நாடுகள் பங்கேற்க உள்ளன.

தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டித் தெடரில் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்ட அணிகள், உலக தர வரிசையில் முன்னணி வகிக்கும் நாடுகள் மற்றும் போட்டித் தொடரை ஏற்பாடு செய்யும் நாடுகள் என்ற அடிப்படையில் 12 நாடுகள் தகுதி பெற்றுக் கொண்டுள்ளன.

ஏனைய 8 நாடுகளும் தகுதிகாண் போட்டிகள் மூலமும் தர வரிசை மூலமும் தெரிவு செய்யப்பட உள்ளன. 2026ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இதன்படி இலங்கை இந்திய அணிகள் அடுத்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக ரி20 தர வரிசையில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தர வரிசையின் அடிப்படையில் தெரிவாகியுள்ளன.

இதன்படி, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்ஆபிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய 12 அணிகள் தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்காது உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுக்கொண்டுள்ளன.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...