4 8
இந்தியாஇலங்கைசெய்திகள்

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி: மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா

Share

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி: மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா

கடந்த வாரம் ஏர் இந்தியா பெங்களூர்(Bengaluru) – சான் பிரான்சிஸ்கோ(San Francisco) விமானத்தில் பயணித்த ஒருவரின் உணவில் உலோகத் தகடு(blead) ஒன்று காணப்பட்டுள்ளது, அதற்காக ஏர் இந்தியா(Air India) விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்த சம்பவம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI 175 விமானத்தில் இடம்பெற்றுள்ளது.

பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி சென்ற விமானத்தில் குறித்த பயணி பயணித்துள்ளார்.

பயணத்தின் இடையே பயணிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, வழங்கப்பட்ட உணவில் உலோகத் தகடு ஒன்று இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம்,

“உணவில் உலோகத் தகடு இருப்பதை பயணி கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்பதுடன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் இயந்திர கத்திகளை கொண்டு காய்கறிகளை வெட்டும் போது அதில் ஒரு பகுதி உடைந்து விழுந்து இருக்கலாம்” என விளக்கம் அளித்துள்ளது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...