3 7
உலகம்செய்திகள்

உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்ற நாடுகள்

Share

உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்ற நாடுகள்

எதிர்வரும் 2026ம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவதற்கு 12 நாடுகள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளன.

அடுத்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரிலும் மொத்தமாக 20 நாடுகள் பங்கேற்க உள்ளன.

தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டித் தெடரில் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்ட அணிகள், உலக தர வரிசையில் முன்னணி வகிக்கும் நாடுகள் மற்றும் போட்டித் தொடரை ஏற்பாடு செய்யும் நாடுகள் என்ற அடிப்படையில் 12 நாடுகள் தகுதி பெற்றுக் கொண்டுள்ளன.

ஏனைய 8 நாடுகளும் தகுதிகாண் போட்டிகள் மூலமும் தர வரிசை மூலமும் தெரிவு செய்யப்பட உள்ளன. 2026ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இதன்படி இலங்கை இந்திய அணிகள் அடுத்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக ரி20 தர வரிசையில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தர வரிசையின் அடிப்படையில் தெரிவாகியுள்ளன.

இதன்படி, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்ஆபிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய 12 அணிகள் தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்காது உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுக்கொண்டுள்ளன.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...