இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் தாக்கப்பட்ட இலங்கையர்

Share
rtjy 262 scaled
Share

ஐரோப்பிய நாடொன்றில் தாக்கப்பட்ட இலங்கையர்

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காண்டிச்சி என்ற பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இத்தாலியில் வீட்டுப் பணியாளராக செயற்பட்டு வருகின்றார்.

பணிக்கு செல்லும் போது அவரது வீட்டின் முன்னால் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு பெறுமதியான ஐபோன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அரை மயக்கத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொலைபேசியை திருடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையன் கையடக்கத் தொலைபேசியை திருடிய பின்னரும் கீழே விழுந்த இலங்கை நபரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவராலேயே குறித்த இலங்கையர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக குறிப்பிடப்படுகின்றது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...