14 4
உலகம்செய்திகள்

சில அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம்: ஜேர்மனி அமைச்சர் தகவல்

Share

சில அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம்: ஜேர்மனி அமைச்சர் தகவல்

சிரியாவிலிருந்து அகதிகளாக ஜேர்மனிக்கு வந்த சிலர், மீண்டும் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப்படலாம் என ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாதின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, சிரியா நாட்டவர்கள் சிலர் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப்படலாம் என ஜேர்மனி உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நிலைமை சீராகிவிட்டதால், எங்கள் நாட்டின் சட்டத்தின்படி ஜேர்மனியில் மக்களுக்கு இந்த பாதுகாப்பு அவசியமில்லை என்றால், புலம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான பெடரல் அலுவலகம் (BAMF) பாதுகாப்பு மானியங்களை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறும் என்றார் அவர்.

வேலை அல்லது பயிற்சி இல்லாததால் ஜேர்மனியில் குடியிருக்க உரிமை இல்லாதவர்கள் மற்றும் தானாக முன்வந்து சிரியாவுக்குத் திரும்பாதவர்களுக்கு இது பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

என்றாலும், ஜேர்மனியுடன் நன்கு ஒருங்கிணைந்து வாழ்பவர்கள், வேலையில் இருப்பவர்கள், ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டவர்கள் முதலானோர் ஜேர்மனியில் தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நான்சி தெரிவித்தார்.

சிரியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் சிரியர்களுக்கு உதவிகள் அளிக்கப்படும், அதே நேரத்தில் குற்றவாளிகள் மற்றும் இஸ்லாமியவாதிகள் முடிந்தவரை விரைவாக நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் கூறிய நான்சி, அற்கான சட்டப்படியான நெறிமுறைகள் உள்ளன, சிரியாவில் நிலவும் நிலைமையைப் பொருத்து அவை பயன்படுத்தப்படும் என்றார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...