32
உலகம்செய்திகள்

பதவியேற்ற அடுத்த நாளிலே ராஜினாமா செய்த முதலமைச்சர் மனைவி!

Share

பதவியேற்ற அடுத்த நாளிலே ராஜினாமா செய்த முதலமைச்சர் மனைவி!

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் மனைவி பதவியேற்ற அடுத்த நாளிலே ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியானது வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. இக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

இவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் பின்னர், நேற்று சட்டமன்றத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கிருஷ்ண குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை கிருஷ்ண குமாரி ராய் ராஜினாமா செய்தார். இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

இவரது ராஜினாமாவை சபாநாயகர் ஷேர்பா ஏற்றுக்கொண்டதாக, சட்டசபை செயலாளர் லலித் குமார் குரங் தெரிவித்தார்.

அருணாசலப் பிரதேசத்தில் முதலமைச்சர் பீமா காண்டு பதவியேற்பு விழாவில் பிரேம் சிங் தமங் பங்கேற்க சென்ற நிலையில் அவரது மனைவி ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...

iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...