6 39
உலகம்செய்திகள்

முகப்புத்தகத்தில் வெளியான பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குரல் பதிவு

Share

முகப்புத்தகத்தில் வெளியான பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குரல் பதிவு

பங்களாதேஸில்(Bangladesh) கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தினால் தான் நாடு இல்லாமல் வீடு இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) வெளியிட்ட குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது.

இந்த குரல் பதிவானது அவரின் முகப்புத்தக பக்கத்தில் வெளியாகியுள்ளது.

பங்களாதேசத்தில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் கடும் போராட்டம் மற்றும் வன்முறை ஏற்பட்டது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் கட்டுப்பாட்டை மீறி சென்ற நிலையில் அவர் பதவி விலக மறுத்தார்.

அதனை தொடர்ந்து, நடந்த போராட்டத்தில் 600 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.

இதனால் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொது வெளியில் வராமல் இருக்கும் ஷேக் ஹசீனா குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பங்களா மொழியில் அவர் வெளியிட்டு இருக்கும் அந்த குரல் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது,

“வீடு, நாடு இல்லாமல் தவிக்கிறேன் வெறும் 20-25 நிமிடங்களில் நாங்கள் மரணத்தில் இருந்து தப்பினோம்.

ஒகஸ்ட் 21ஆம் திகதி கொலையில் இருந்து தப்பியதாக நான் உணர்கிறேன். அல்லாவின் கருணை இல்லை என்றால் இந்த முறை நான் தப்பித்து இருக்க மாட்டேன். கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி, முதல் முறையாக நடந்தது இல்லை. எனது வாழ்க்கையில் என்னைக் கொல்வதற்கு பல முறை சதி நடந்திருக்கிறது.

எனக்கு எதிராக உள்ளவர்கள் என்னை கொலை செய்ய எப்படி எல்லாம் திட்டமிட்டு இருந்தார்கள் என்பதை உலகம் அறியும். வீடு, நாடு இல்லாமல் நான் தவிக்கிறேன். அனைத்தும் தீக்கிரையாக்கபட்டது” என அழுதபடி கூறும் வகையில் இந்த குரல் பதிவு உள்ளது.

Share
தொடர்புடையது
24 6694ccce98702
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற கோர விபத்து: நால்வர் நீரில் மூழ்கி பலி!

சிலாபம் – தெதுறு ஓயா ஆற்றில் இன்று (நவ 06) நீராடச் சென்ற ஒரு சுற்றுலா...

1762390683 Sri Lanka Pallekele Kandy fire 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி பல்லேகலை தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: 3 தீயணைப்பு வாகனங்கள் விரைவு!

கண்டி – பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இன்று (நவம்பர் 06)...

24 6705d4ceb2b32
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் ஆயுதங்களை தேடி அகழ்வு முயற்சி: 15 அடிக்கு மேல் தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் (நவ4) அகழ்வு...

25 690b61f42a8cd
செய்திகள்இலங்கை

அபாயம்! இலங்கையில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களும் செயலிழப்பு – 3 ஆண்டுகளாக சமிக்ஞை இல்லை!

இலங்கையில் உள்ள 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களும் தற்போது செயல்படவில்லை என்பதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...