4 46
இலங்கைசெய்திகள்

வலுக்கும் உறவு : சீனாவில் புதிய தூதரகத்தை திறக்கும் அநுர அரசு

Share

வலுக்கும் உறவு : சீனாவில் புதிய தூதரகத்தை திறக்கும் அநுர அரசு

சீனாவின்(china) செங்டு நகரில்  இலங்கை(sri lanka) துணைத் தூதரகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவின்(anura kumara dissanayake) சீன விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்தார்.

“அந்த மாநிலத் தலைவர் எங்களுக்கு தேவையான இடத்தையும் வசதிகளையும் இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டார். அதன்படி, எதிர்காலத்தில் செங்டு நகரில் வெளியுறவு அமைச்சகமாக ஒரு புதிய தூதரக அலுவலகத்தைத் திறக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.”

ஜனாதிபதியின் சீனப் பயணம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சீனப் பயணத்தின் போது, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து இரு தரப்பினரும் ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...