9 22
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் வெடித்த பாரிய போராட்டத்தால் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு

Share

பங்களாதேஷில் வெடித்த பாரிய போராட்டத்தால் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு

பங்களாதேஷில்(Bangladesh) 30 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் வெடித்த நிலையில் நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்ததால் கடந்த மாதம் 17 ஆம் திகதி அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்து போராட்டத்தை போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் கடந்த 5 ஆம் திகதி ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாட்டில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பியதோடு, பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க இடைக்கால அரசு முடிவு செய்தது.

அதன்படி 18ஆம் திகதி முதல் கல்வி நிறுவனங்களை திறக்குமாறு கடந்த 15 ஆம் திகதி கல்வி அமைச்சகம் உத்தரவிட்டதோடு, ஒரு மாதத்துக்குப்பிறகு நாடு முழுவதும் நேற்று பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...