9 22
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் வெடித்த பாரிய போராட்டத்தால் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு

Share

பங்களாதேஷில் வெடித்த பாரிய போராட்டத்தால் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு

பங்களாதேஷில்(Bangladesh) 30 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் வெடித்த நிலையில் நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்ததால் கடந்த மாதம் 17 ஆம் திகதி அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்து போராட்டத்தை போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் கடந்த 5 ஆம் திகதி ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாட்டில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பியதோடு, பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க இடைக்கால அரசு முடிவு செய்தது.

அதன்படி 18ஆம் திகதி முதல் கல்வி நிறுவனங்களை திறக்குமாறு கடந்த 15 ஆம் திகதி கல்வி அமைச்சகம் உத்தரவிட்டதோடு, ஒரு மாதத்துக்குப்பிறகு நாடு முழுவதும் நேற்று பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...