tamilnib 9 scaled
உலகம்செய்திகள்

கேரளாவில் நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்

Share

கேரளாவில் நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்திலும் ரஷ்ய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பு நடப்பதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. இன்று, அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல், 17ஆம் திகதி வரை தேர்தல் நடைபெறுகிறது. ரஷ்யாவைப் பொருத்தவரை, எதிர்க்கட்சியினர் ஒன்றில் கொல்லப்பட்டுவிட்டார்கள், அல்லது சிறையிலோ தலைமறைவாகவோ இருக்கிறார்கள் என்பதால், புடினுக்குதான் வெற்றி என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அப்படி புடின் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், அவரது பதவிக்காலம் குறைந்தபட்சம் 2030 வரை நீடிக்கும். 2020இல் ரஷ்ய அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், அவர் மீண்டும் தேர்தலில் நிற்கக்கூடும், அப்படியே 2036வரை பதவியில் நீடிக்கவும் கூடும்.

இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்திலும் ரஷ்ய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகிறது. அதாவது, இந்தியாவில் வாழும் அல்லது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ரஷ்யர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய தூதரத்தில் வாக்குச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பதற்கு தங்களுக்கு ஏற்பாடு செய்து தந்த அனைவருக்கும், ரஷ்ய தூதரகத்துக்கும், குறிப்பாக, சென்னையிலிருக்கும் ரஷ்ய துணைத் தூதரகத்துக்கும், தானும் கேரளாவில் வாழும் தன் சக ரஷ்யக் குடிமக்களும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவிக்கிறார் ரஷ்யக் குடிமகளான Ulia என்பவர்

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...