புடினை வீழ்த்த பிரித்தானிய உளவுத்துறைக்கு உதவ முன்வந்துள்ள ரஷ்யர்கள்
உலகம்செய்திகள்

புடினை வீழ்த்த பிரித்தானிய உளவுத்துறைக்கு உதவ முன்வந்துள்ள ரஷ்யர்கள்

Share

புடினை வீழ்த்த பிரித்தானிய உளவுத்துறைக்கு உதவ முன்வந்துள்ள ரஷ்யர்கள்

போரால் வெறுப்படைந்துள்ள ரஷ்யர்கள் பிரித்தானியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நகரங்களை நாசம் செய்து, அப்பாவி உக்ரைனியர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி, ஆயிரக்கணக்கான பிள்ளைகளை கடத்தும் அராஜக செயல்களில் ஈடுபட்டுவரும் ரஷ்யப் படையினரைக் கண்டு ரஷ்யர்கள் பலர் வெறுப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் பிரித்தானிய உளவுத்துறைத் தலைவரான Sir Richard Moore.

ரஷ்யப்படையினரின் கொடுஞ்செயல்களால் மனசாட்சி உறுத்த, இந்த ரஷ்யர்கள் பிரித்தானியாவுக்காக ரஷ்யாவை உளவு பார்க்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.

அப்படி வருபவர்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள Sir Richard Moore, அவர்களுடைய இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும், ரஷ்யர்களும் பிரித்தானியர்களும் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டு வர பாடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்.

Sir Richard Moore பொதுவாக இப்படி வெளியில் வந்து பேசுவதில்லை. அவர் உளவுத்துறைத் தலைவராக பொறுப்பேற்றபின் இப்படி வெளிப்படையாக பேசுவது இது இரண்டாவது முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...