புடினை வீழ்த்த பிரித்தானிய உளவுத்துறைக்கு உதவ முன்வந்துள்ள ரஷ்யர்கள்
உலகம்செய்திகள்

புடினை வீழ்த்த பிரித்தானிய உளவுத்துறைக்கு உதவ முன்வந்துள்ள ரஷ்யர்கள்

Share

புடினை வீழ்த்த பிரித்தானிய உளவுத்துறைக்கு உதவ முன்வந்துள்ள ரஷ்யர்கள்

போரால் வெறுப்படைந்துள்ள ரஷ்யர்கள் பிரித்தானியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நகரங்களை நாசம் செய்து, அப்பாவி உக்ரைனியர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி, ஆயிரக்கணக்கான பிள்ளைகளை கடத்தும் அராஜக செயல்களில் ஈடுபட்டுவரும் ரஷ்யப் படையினரைக் கண்டு ரஷ்யர்கள் பலர் வெறுப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் பிரித்தானிய உளவுத்துறைத் தலைவரான Sir Richard Moore.

ரஷ்யப்படையினரின் கொடுஞ்செயல்களால் மனசாட்சி உறுத்த, இந்த ரஷ்யர்கள் பிரித்தானியாவுக்காக ரஷ்யாவை உளவு பார்க்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.

அப்படி வருபவர்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள Sir Richard Moore, அவர்களுடைய இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும், ரஷ்யர்களும் பிரித்தானியர்களும் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டு வர பாடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்.

Sir Richard Moore பொதுவாக இப்படி வெளியில் வந்து பேசுவதில்லை. அவர் உளவுத்துறைத் தலைவராக பொறுப்பேற்றபின் இப்படி வெளிப்படையாக பேசுவது இது இரண்டாவது முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...