7 1
உலகம்உலகம்செய்திகள்

பின்னடைவை ஒத்துக்கொண்ட உக்ரைன்!! தடுமாறும் இராணுவம்!

Share

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் இராணுவத் தாக்குதல்கள் எதிர்பார்த்ததை விட மந்த கதியிலேயே செல்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த மோதல்கள் ஹொலிவூட் திரைப்படம் என சிலர் எண்ணுகின்றார்கள் எனவும் உடனடியாகவே முடிவுகளை எதிர்பார்க்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் எதிர்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், சப்போறிஸ்ஷியா மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் உள்ள 08 கிராமங்களை இதுவரை விடுவித்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. 02 இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவு ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவ ரீதியில் அவர்களை பின் நகர்த்துவது என்பது எளிதான விடயம் அல்ல என உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் சிறந்த விதத்தில் போர்க் களத்தில் முன்னேறுவோம் எனக் கூறியுள்ள உக்ரைன் அதிபர், ஆபத்தில் இருப்பது மக்களின் வாழ்க்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நேட்டோவிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார். எனினும் நேட்டோ இராணுவ கூட்டணியில் அங்கத்துவத்தை பெறுவதே இறுதி இலக்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் உக்ரைனின் எதிர்தாக்குதலில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெற்கில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் பாரிய இழப்புக்களை உக்ரைன் சந்தித்துள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மேலும் எதிர்தாக்குதல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதன்மூலம் எதிர்பார்த்த விடயங்களை அடையும் சாத்தியங்கள் இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் உக்ரைனை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவிகளை வழங்குவதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...