கீவ் நகரில் 900 பேரின் உடல்கள்
உலகம்செய்திகள்

கீவ் நகரில் மக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்பு!

Share

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு உக்ரைன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் அப்பாவிப் பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 900 இற்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கீவ் பிராந்திய பொலிஸ் படைத் தலைவர் ஆன்ட்ரிய் நெபிடோவ் தெரிவித்துள்ளார்.

வீதிகளிலும், தற்காலிக புதைகுழிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த உடல்களில், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் மக்களை வீதிகளில் நிற்க வைத்து ரஷ்ய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புச்சா நகரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீவிலும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...