8 27
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளை எச்சரித்த புடின்

Share

மத்திய கிழக்கு நாடுகளை எச்சரித்த புடின்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலை இறுக்கமடைந்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் போரின் விளிம்பில் காணப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்குபற்றி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், ஒரு வருடத்திற்கு முன்னால் காசாவில் தொடங்கிய இராணுவ நடவடிக்கை தற்போது லெபனான் வரை பரவியிருப்பதால் பிராந்தியத்தில் உள்ள மற்றைய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், பலஸ்தீனம் சுதந்திர நாடாக மாறும் வரை மத்திய கிழக்கில் பதற்றம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பலஸ்தீனத்தில் ஏற்படுத்துவதற்கான முக்கிய கோரிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இரு நாடுகளின் கொள்கையை செயற்படுத்துவதாகும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

 

இந்த தீர்மானம் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும் என அவர் கூறியுள்ளார். குறித்த மாநாட்டில் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...